போளூர் பேரூராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், போலீஸார் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை தூய்மையே சேவை விழிப்புணர்வு இயக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, போளூரில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமாபானு தலைமையில், பேருந்து நிலையம், அரசுப் பள்ளிகள் ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணி நடைபெற்றது.
இந்தப் பணியை வட்டாட்சியர் பாலாஜி தொடக்கிவைத்தார்.
இதில், காவல் துணைக் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், உதவி ஆய்வாளர் தயாளன், பேரூராட்சி ஆய்வாளர் சோமு மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.