மாநில கோ - கோ போட்டி: அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில அளவிலான கோ - கோ போட்டியில் விளையாட திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில அளவிலான கோ - கோ போட்டியில் விளையாட திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வேலூர் மண்டல அளவிலான கோ - கோ விளையாட்டுப் போட்டி வேலூரில் அண்மையில் நடைபெற்றது. இதில், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் மண்டல அளவில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெ.காயத்ரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம், ஒன்றியக் கவுன்சிலர் பழனி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் அய்யாக்கண்ணு, உடற்கல்வி ஆசிரியர்கள் பி.ராமமூர்த்தி, முனியப்பன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com