அம்பேத்கர் பிறந்த நாள் விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் புதிய காலனியில் புரட்சி அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம் சார்பில், சட்டமேதை அம்பேத்கரின் 127-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் புதிய காலனியில் புரட்சி அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம் சார்பில், சட்டமேதை அம்பேத்கரின் 127-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தேவிகாபுரம் புதிய காலனியில் தேவிகாபுரம் -ஆரணி சாலையில் அம்பேத்கர் முழு உருவச்சிலை உள்ளது. இந்தச் சிலைக்கு புரட்சி அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கத்தினர் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஓன்றியத் தலைவர் கே.ஏழுமலை தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் விஎம்டி.வெங்கடேசன், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சித்ராபிச்சாண்டி, கே.சி.சண்முகம் மற்றும் புரட்சி அம்பேத்கர் நூற்றாண்டு இயக்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com