தமிழ் கலை இலக்கியத் திருவிழா

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில், சங்கத்தின் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா, கலை இலக்கியத் திருவிழா வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில், சங்கத்தின் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா, கலை இலக்கியத் திருவிழா வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமை வகித்தார். சங்கச் செயலர் பா.சீனிவாசன் வரவேற்றார். கவிஞர் வசீகரன் வந்தை கவிஞர்களின் கவிதை உலாவை தொடக்கி வைத்தார். கடந்த பொதுத்தேர்வில் தமிழில் முதலிடம் பெற்ற வந்தவாசி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு கவிஞர் கார்முகிலோன் பரிசுகளை வழங்கினார்.
கவிஞர் மு.முருகேஷ் எழுதிய குழந்தைகளால் அழகாகும் 
பூமி என்ற நூலை திரைப்பட இயக்குநர் பிருந்தா சாரதி வெளியிட, இரா.சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.
விழாவில், சங்க துணைத் தலைவர்கள் சு.அசோக்குமார், பீ.ரகமத்துல்லா, செயற்குழு உறுப்பினர் பிரேம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கப் பொருளாளர் தேவா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com