ஆஸ்ரமத்தில் பக்தி சொற்பொழிவு 

திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவானின் நூற்றாண்டு விழா இசை நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவானின் நூற்றாண்டு விழா இசை நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
 ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில், பகவான் யோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை தஞ்சாவூர் கலைமாமணி ஜானகி சுப்பிரமணியன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 6.15 மணி முதல் 8.15 மணி வரை சென்னை ஸ்ரீ கணேஷ் சர்மாவின் சங்கீத உபன்யாச நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com