ஏப். 20-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. 

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்துக்கு, ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர்கள் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர்.
 எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com