இலவச இசைப் பயிற்சி முகாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில், தேச பக்திப் பாடல்கள் பாடுவதற்கான இலவச இசைப் பயிற்சி முகாம்


சுதந்திர தினத்தை முன்னிட்டு, வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில், தேச பக்திப் பாடல்கள் பாடுவதற்கான இலவச இசைப் பயிற்சி முகாம் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை வகித்தார். வந்தவாசி வட்டாரக் கல்வி அலுவலர் அ.செல்லப்பன், ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார், பள்ளித் தலைமை ஆசிரியர் க.ஜோதிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் ம.கா.செந்தில்குமார் வரவேற்றார்.
வந்தவாசி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் வாசுகி முகாமை தொடக்கிவைத்து பேசினார். மேலும், மாணவ, மாணவிகளுக்கு இசைப் பயிற்சி புத்தகங்களை அவர் வழங்கினார். இசை
ஆசிரியர் டி.பி.வெங்கடேசன் மாணவர்களுக்கு தேச பக்திப் பாடல்கள் பாடுவதற்கான இசைப் பயிற்சியை அளித்தார்.
முகாமில், எழுத்தாளர் பூங்குயில் சிவகுமார், கவிஞர் தமிழ்ராசா, அரிமா சங்க முன்னாள் தலைவர் எட்டியப்பன், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் கு.சதானந்தன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com