கூட்டுறவுச் சங்கங்களின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.


திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3, 4-ஆவது நிலையில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டு, நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
அதன்படி, திருவண்ணாமலை நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வங்கித் தலைவராக டிஸ்கோ எஸ்.குணசேகரன், துணைத் தலைவராக ஆர்.அரசப்பன் மற்றும் 9 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சனிக்கிழமை பதவியேற்றனர்.
திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத் தலைவராக வி.சிவக்குமார், துணைத் தலைவராக டி.அருள்மொழித்தேவன் மற்றும் 9 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர். விழாவில், சங்கச் செயலர் பி.ராதாகிருஷ்ணன் உள்பட சங்க ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை நிலவள வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத் தலைவராக ஏ.கே.இளவழகன், துணைத் தலைவராக குமாரராஜா உள்பட 9 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதில், சங்கச் செயலர் ஆர்.முருகதாஸ் உள்பட சங்க ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சோமாசிபாடியில்...: திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி தொடக்க வேளாண் கூட்டுறவுச் கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைவராக சோமாசிபாடி கே.வி.ரகோத்தமன், துணைத் தலைவராக வட்ராபுத்தூர் எஸ்.தங்கராஜ் மற்றும் 9 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர். விழாவில், தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வானாபுரம், அடிஅண்ணாமலை: இதேபோல, திருவண்ணாமலையை அடுத்த வானாபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக அ.மணி, துணைத் தலைவராக பா.உத்தண்டி ஆகியோரும், திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலை மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக இந்திரா, துணைத் தலைவராக அமிர்தம் ஆகியோர் பதவியேற்றனர்.
ஆத்துரை: சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக பி.ராகவன், துணைத் தலைவராக பி.சங்கர் ஆகியோர் பதவியேற்றனர்.
இதில், தேர்தல் அலுவலரான சார் துணைப் பதிவாளர் அழகப்பன், சங்கச் செயலர் ஏழுமலை, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பாமக முன்னாள் மாவட்டத் தலைவர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தச்சாம்பாடி: சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக இ.சரளாஇளங்கோ, துணைத் தலைவராக முத்து ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com