தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தை மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன்


திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தை மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
திருவண்ணாமலை - வேலூர் சாலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் தினமும் பகல் 12 மணி முதல் 2 மணி வரை இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அதிமுக நகர துணைச் செயலர் அரசப்பன் தலைமை வகித்தார். அதிமுக நிர்வாகிகள் ஊசாம்பாடி வெங்கடாச்சலம், ஆடையூர் குமார், பூண்டி ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கட்சி அலுவலகத்துக்கு வருவோருக்கு தினமும் தனது சொந்த செலவில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் சீலப்பந்தல் சிவா, காட்டாம்பூண்டி சண்முகம், அருள்குமரன், விஜயகுமார், சாத்தனூர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com