: திருவண்ணாமலை, சாரோன் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் சாரோன் சவுந்தர் (படம்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞரணி மாநில துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இவரை நியமித்துள்ளார். சாரோன் சவுந்தர் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு கட்சியின் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு, களப்பணியாற்ற வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகள் இவருக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.