ஆரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், வெள்ளிக்கிழமை ஆற்றங்கரை, ஏரிக்கரைகளில் பனை மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஆரணி தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிச் செயலர் முத்து தலைமையில், அந்தக் கட்சியினர் கமண்டல நாக நதிக்கரை, சைதாப்பேட்டை ஏரிக்கரைகளில் சுமார் ஆயிரம் பனை மரக்கன்றுகளை நட்டனர். மேலும், பனை விதைகளையும் நட்டனர்.
இதுகுறித்து முத்து கூறியதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு, ஆற்றங்கரை, ஏரிக்கரைகளில் பனை மரக்கன்றுகளை நட்டு வைத்து வருகிறோம். பனை மரங்களால் கரைகள் பலமாகும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச் செயலர் இனியவன், நிர்வாகிகள் சண்முகம், ஆட்டோ ஜோதி, தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.