ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள ஸ்ரீஓசூர் அம்மன் கோயிலில் 5-ஆம் ஆடி வெள்ளி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில், வழக்குரைஞர் க.சங்கர், நகர பேரவைச் செயலர் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு மற்றும் கோயில் விழாக் குழுவினர் கலந்து கொண்டனர்.