போளூரை அடுத்த அத்திமூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர், துணைத் தலைவர் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அத்திமூர் கிராமத்தில் உள்ள எச்.எச்.514 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக எம்.சின்னதம்பி, துணைத் தலைவராக ஏழுமலை (எ) பூமாலை ஆகியோரை அங்கத்தினர் ஒருமனதாகத் தேர்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, எம்.சின்னதம்பி, ஏழுமலை (எ) பூமாலை ஆகியோருக்கு அங்கத்தினர் பச்சையப்பன், பாஸ்கரன், தங்கதுரை, தாமோதிரன், அமுதா, மல்லிகா, ஷீலா, சுகுமாறன், விஜயன் ஆகியோர் சால்வை, அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர்கள் ரவி, ஏழுமலை, வழக்குரைஞர்கள் பாண்டியன், மதியழகன், திமுக போளூர் நகரச் செயலர் தனசேகர், சரவணன், ஒன்றியப் பிரதிநிதிகள் தேவர், ஆறுமுகம், சங்கச் செயலர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், அவர்களும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.