பள்ளிப் பரிமாற்றத் திட்ட நிகழ்ச்சி

கீழ்பென்னாத்தூரை அடுத்த கெங்கனந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிப் பரிமாற்றத் திட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூரை அடுத்த கெங்கனந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிப் பரிமாற்றத் திட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை கீழ்நாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற பள்ளிப் பரிமாற்றத் திட்ட நிகழ்ச்சிக்கு, கெங்கனந்தல் பள்ளித் தலைமை ஆசிரியர் பூர்ண சந்திரன் தலைமை வகித்தார். கீழ்நாத்தூர் பள்ளித் தலைமை ஆசிரியை லதா முன்னிலை வகித்தார். ஆசிரியர் சர்தார் வரவேற்றார்.
வட்டாரக் கல்வி அலுவலர் ஸ்ரீராமுலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பள்ளிப் பரிமாற்றத் திட்டத்தால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கினார். இதில், பள்ளி ஆசிரியைகள் இந்திரா, வெண்ணிலா, விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com