காலமானார் மினர்வா எஸ்.இளங்கோ

ஆரணியைச் சேர்ந்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலரும், ஆரணி நகர கூட்டுறவு வங்கி இயக்குநருமான மினர்வா எஸ்.இளங்கோ மாரடைப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டு  சனிக்கிழமை

ஆரணியைச் சேர்ந்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலரும், ஆரணி நகர கூட்டுறவு வங்கி இயக்குநருமான மினர்வா எஸ்.இளங்கோ மாரடைப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டு  காலமானார்.

இவரது உடலுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாபு முருகவேல், ஜெமினிராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை நகரச் செயலர் பாரி பி.பாபு, நகர, ஒன்றியச் செயலர்கள் எ.அசோக்குமார், பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஆனந்தகுமாரிகருணாகரன் உள்பட ஆரணியில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இளங்கோவின் மனைவி முன்னாள் நகர்மன்ற உறுப்பினரான அன்பு ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com