செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரைவையைத் தொடங்குவதற்கான அனல் ஏற்றும் பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலைத் தலைவர் தூசி கே.குமரேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் புஷ்பா பாஸ்கர், மேலாண்மை இயக்குநர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், விவசாய சங்கத் தலைவர் வேலு, கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர்கள் கே.வெங்கடேசன், சி.துரை, முனுசாமி, நமச்சிவாயம், மல்லிகாபஞ்சாட்சம், சரஸ்வதி தனசேகரன், கோபால், சர்க்கரை ஆலை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.