பிப்.16-இல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) நடைபெறுகிறது.
 திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில், மாதந்தோறும் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், வேளாண் துறை, விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்கின்றனர்.
 எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பொதுப் பிரச்னைகள் தொடர்பாக தெரிவித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com