போளூரில் அமைந்துள்ள பாலசௌந்தரி உடனுறை சோமநாதஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
போளூர் வீரப்பன் தெருவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, மூலவருக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சோமநாதஸ்வரரை பக்தர்கள் வழிபட்டனர்.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் பாலசௌந்தரி உடனுறை சோமநாதஸ்வரர் கோயில் வளாகத்தில் 3 முறை வலம் வந்தார். இதில், போளூர், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.