3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: திருவண்ணாமலையில் 450 சத்துணவு ஊழியர்கள் கைது

திருவண்ணாமலையில் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 450 சத்துணவு ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலையில் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 450 சத்துணவு ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சார்பில், 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.அல்போன்ஸ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.வேடியப்பன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.ஜோதிசங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 
மறியல் போராட்டம்: இதையடுத்து, அண்ணா சிலை எதிரில் இருந்து சத்துணவு ஊழியர்கள் அனைவரும் பேரணியாகச் சென்று பெரியார் சிலை எதிரே மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, சத்துணவு ஊழியர்களை நிரந்தரமாக்கி, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 
ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
450 பேர் கைது: இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.அண்ணாதுரை, மாவட்டத் தலைவர் எம்.அல்போன்ஸ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், சத்துணவு ஊழியர்கள் என மொத்தம் 450 பேரை போலீஸார் கைது செய்தனர்.  இவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com