செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமை எம்எல்ஏ தூசி கே.மோகன் தொடக்கி வைத்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 - ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வர் ஆ.மூர்த்தி தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் எம்.குமார் வரவேற்றார்.
செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன், ரத்த தான முகாமைத் தொடக்கி வைத்தார். செய்யாறு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி.கோவிந்தன், அரசு மாவட்ட மருத்துவ அலுவலர் டி.பாண்டியன், மருத்துவர்கள் பாலாஜி, தாமரை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கிக் குழுவினர் பங்கேற்று கல்லூரி மாணவர்கள் 116 பேர் அளித்த ரத்தத்தை தானமாகப் பெற்றனர்.
முகாமில் செய்யாறு ரோட்டரி சங்கத் தலைவர் ஸ்ரீதர், உதவி ஆளுநர் தி.எ.ஆதிகேசவன், சங்கப் பணி இயக்குநர் ஜெ.சண்முகம், தலைவர் தேர்வு சந்தோஷ்குமார், செயலர் தேர்வு கோவேந்தன், கராத்தே சந்திரசேகர், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மகேந்திரன், எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.