மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

செங்கம் அருகே வியாழக்கிழமை மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

செங்கம் அருகே வியாழக்கிழமை மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சேத்துப்பட்டில் இருந்து செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட கட்டமடுவுக்கு லாரியில் மணல் கடத்தப்படுவதாக செங்கம் போலீஸார், வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், வருவாய்த் துறையினர், போலீஸார் செங்கம் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கட்டமடுவு கிராமம் அருகே தார்ப்பாய் போட்டு மூடி வந்த லாரியை நிறுத்தி வருவாய்த் துறையினர் சோதனையிட்டதில், அந்த லாரியில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளிவரப்பட்டது தெரியவந்தது.
உடனடியாக அந்த லாரியை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர், அதனை செங்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து செங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com