மனுநீதி நாள் முகாம்: 118 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

செய்யாறை அடுத்த சுமங்கலி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 118 பேருக்கு ரூ.2.74 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை எம்எல்ஏ தூசி கே.மோகன் வழங்கினார்.

செய்யாறை அடுத்த சுமங்கலி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 118 பேருக்கு ரூ.2.74 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை எம்எல்ஏ தூசி கே.மோகன் வழங்கினார்.
வெம்பாக்கம் வட்டத்திலுள்ள சுமங்கலி, அசனமாப்பேட்டை ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் சுமங்கலி கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு திருவண்ணாமலை மாவட்ட தனித் துணை ஆட்சியர் பி.குணசேகர் தலைமை வகித்தார். வெம்பாக்கம் வட்டாட்சியர் சபாஷ் சந்தர் முன்னிலை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பெருமாள் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் கலந்து கொண்டு, 118 பேருக்கு ரூ.2.74 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் வெம்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ருத்தரப்பன், பெரூங்கட்டூர் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் கிருஷ்ணமணி, அதிமுக நிர்வாகிகள் எஸ்.திருமூலன், டி.பி.துரை, கிளைக் கழகம் எஸ்.ஜி.ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com