இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கு மற்றும் வங்கி ஊழல்களை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கு மற்றும் வங்கி ஊழல்களை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலர் நவீன் குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநில பொதுச் செயலர் வானமாமலை, கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், மாநகர் மாவட்டப் பொருளாளர் ராஜேஷ் முருகன் உள்ளிட்டோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com