சிலைகள் சேதம்: இளைஞர் கைது

செய்யாறு அருகே செவ்வாய்க்கிழமை சாமி சிலைகளை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர். 

செய்யாறு அருகே செவ்வாய்க்கிழமை சாமி சிலைகளை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர். 
செய்யாறை அடுத்த சோதியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனபால். இவர், இந்தக் கிராமத்தில் உள்ள விநாயகர், நவக்கிரக கோயில்களை பராமரித்து பூஜை செய்து வருகிறார். 
வழக்கம்போல, தனபால் செவ்வாய்க்கிழமை காலை கோயிலில் பூஜைகள் செய்து கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (29), பெண்களை ஆபாசமாகத் திட்டியதுடன், கோயிலில் இருந்த நவக்கிரக சிலைகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தினாராம். 
பிரகாஷை பிடிக்க முயன்ற போது, அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இது குறித்த புகாரின்பேரில் தூசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிரகாஷை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com