சாலை விபத்தில் கப்பல் பொறியாளர் சாவு

செய்யாறில் சாலை விபத்தில் கப்பல் பொறியாளர் உயிரிழந்தார்.

செய்யாறில் சாலை விபத்தில் கப்பல் பொறியாளர் உயிரிழந்தார்.
வந்தவாசி சந்தை சாலைப் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் தேவராஜ் (38). இவர், கப்பல் தொடர்பான பொறியியல் படிப்பைப் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
தேவராஜ் கடந்த 7-ஆம் தேதி செய்யாறில் இருந்து வந்தவாசிக்கு பைக்கில் சென்றார். வந்தவாசி சாலையில் பெரியார் சிலை அருகேயுள்ள வேகத்தடையில் சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.
பின்னர், செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
எனினும், அங்கு அவர் வியாழக்கிழமை  உயிரிழந்தார். இதுகுறித்து செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com