செய்யாறை அடுத்த கூழமந்தல் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் வரும் திங்கள்கிழமை (ஜன.15) கோ பூஜை விழா நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கூழமந்தல் ஏரிக்கரைப் பகுதியில் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலும், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு தனி சன்னதிகளும், ராகு, கேது, சனி பகவான்களுக்கு கோயில்களும் ஒரு சேர அமைந்துள்ளன.
இந்தக் கோயிலில் வரும் திங்கள்கிழமை மாட்டு பொங்கலன்று காலை 6 மணிக்கு அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு, கேது, சனி பகவான்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெறுகின்றன. காலை 9.30 மணிக்கு 51 பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கோ பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.