வந்தவாசியை அடுத்த சு.நாவல்பாக்கம் கிராமத்தில் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தெள்ளாறு கிளை, நபார்டு வங்கி மற்றும் நிதிசார் கல்வி மையம் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தெள்ளாறு கிளை மேலாளர் பி.ரவி, நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலர் வீரராகவன் ஆகியோர் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை குறித்து பேசினர். முகாமில் வங்கி வாடிக்கையாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.