டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு ஜனவரி 15, 26, 31 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு ஜனவரி 15, 26, 31 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 1981-ன்படி, திருவள்ளுவர் தினமான ஜனவரி 15-ஆம் தேதி, குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி, வள்ளலார் நினைவு தினமான ஜனவரி 31-ஆம் தேதி ஆகிய 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகள், மதுபானக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், தனியார் மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடி வைக்கப்பட வேண்டும்.
உத்தரவை மீறி மதுபானங்கள் விற்போர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com