போளூரில் 175 விவசாயிகளுக்கு நிலபுல வரைபடச் சான்று

போளூரில் 175 விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில், அடங்கல், நிலபுல வரைபடச் சான்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

போளூரில் 175 விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில், அடங்கல், நிலபுல வரைபடச் சான்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
 போளூர் உள் வட்டத்திலுள்ள போளூர், மாம்பட்டு, வெண்மணி, குண்ணத்தூர், காங்கேயனூர், வசூர், நம்மியந்தல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில் நுண்ணீர் பாசனத் திட்ட மானியம் பெறுவதற்கான அடங்கல், நிலபுல வரைபடச் சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 175 விவசாயிகளுக்கு வட்டாட்சியர் தியாகராஜன் அடங்கல், நிலபுல வரைபடச் சான்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் வடமலை, சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் மணி மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com