கர்ப்பிணி சாவில் மர்மம்: போலீஸார் விசாரணை

வேட்டவலத்தில் மர்மமான முறையில் நிறைமாத கர்ப்பிணி இறந்தது தொடர்பாக காவல், வருவாய்த் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேட்டவலத்தில் மர்மமான முறையில் நிறைமாத கர்ப்பிணி இறந்தது தொடர்பாக காவல், வருவாய்த் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேட்டவலத்தை அடுத்த ஆவூர், ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் சையத் அன்சர் மனைவி ரேஷ்மா (28). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை குடிநீர் பிடித்துவர வெளியே சென்றிருந்த சையத் அன்சர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்றாராம்.
அப்போது, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரேஷ்மா வீட்டில் மயங்கிக் கிடந்தாராம். இதனால் அதிர்ச்சியடைந்த சையத் அன்சர், 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவசர ஊர்தி ஊழியர்கள் வந்து பரிசோதித்தபோது, ரேஷ்மா இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரியும் விசாரணை மேற்கொண்டுள்ளார். 
இதற்கிடையே, தனது தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாக ரேஷ்மாவின் அண்ணன் வேட்டவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com