செங்கத்தில் செவ்வாய்க்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, செங்கம் லயன்ஸ் சங்கமும், போக்குவரத்து காவல் துறையும் இணைந்து இந்தப் பேரணியை நடத்தின. நிகழ்ச்சிக்கு போக்குவரத்துக் காவலர் ஷேக்தாவூத் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்கத் தலைவர் பாபு வரவேற்றார்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி விழிப்புணர்வுப் பேரணியை தொடக்கி வைத்தார். இதில், ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் கலந்து கொண்டன். பின்னர், ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை போலீஸார் வழங்கினர்.
நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் (செங்கம்) கர்ணன், (மேல்செங்கம்) பூபதி, லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் சபரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.