தராசு முத்திரையிடும் பணிக் காலத்தை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை

சேத்துப்பட்டில் நடைபெற்று வரும் தராசு, எடைக் கற்கள் முத்திரையிடும் பணிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

சேத்துப்பட்டில் நடைபெற்று வரும் தராசு, எடைக் கற்கள் முத்திரையிடும் பணிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
சேத்துப்பட்டு - போளூர் சாலையில் உள்ள வ.ஊ.சி. தெருவில் முத்திரை ஆய்வாளர் அலுலகத்தில் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில், வியாபாரிகளின் தராசு, எடைக் கற்களுக்கு நடப்பு ஆண்டுக்கு முத்திரையிடும் பணி கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்தது. இந்தப் பணி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில், வியாபாரிகள் பலர் தங்களின் தராசு, எடைக் கற்களுக்கு இன்னமும் முத்திரை போடவில்லை எனத் தெரிகிறது.  எனவே, தராசு, எடைக் கற்களுக்கு முத்திரையிடும் பணிக் காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வியாபாரிகள் பலர் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் புருஷோத்தமன், செயலர் அண்ணாமலை, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் அண்ணாதுரை, சங்க நிர்வாகி கருணாநிதி ஆகியோர் முத்திரை ஆய்வாளர் சிவக்குமாரை செவ்வாய்க்கிழமை சந்தித்து தராசு, எடைக் கற்களுக்கு முத்திரையிடும் பணிக் காலத்தை நீட்டிப்பதுடன், வியாபாரிகளின் நலன் கருதி அனைத்து வியாபாரிகளும் பயன்படுத்தும் தராசுகள், எடைக் கற்களுக்கு முத்திரையிட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com