பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜாவைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு நிர்வாகி பெ.கண்ணன், வட்டாரச் செயலர் சி.அப்பாசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆரணி நகர கிளைச் செயலர் கே.பாண்டிராசா, தமிழரசன், எம்.நரசிம்மன், சி.முருகப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.