செய்யாறு அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் கடத்தியதாக ஒருவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
ஆரணி சாலை சுண்டிவாக்கம் கிராமத்தில் செய்யாறு காவல் உதவி ஆய்வாளர் மணி மற்றும் போலீஸார் தீவிர மணல் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையின்போது, அந்த லாரியில் உரிய அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிச் செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சுண்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கந்தசாமியை (35) கைது செய்தனர்.