கலசப்பாக்கத்தில் ஜமாபந்தி நிறைவு: 263 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழா, விவசாயிகள் மாநாட்டில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 263 பேருக்கு பல்வேறு நலத்

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழா, விவசாயிகள் மாநாட்டில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 263 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலசப்பாக்கம், கேட்டவரம்பாளையம், கடலாடி ஆகிய 3 பிர்காக்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கான ஜமாபந்திக் கூட்டம் ஆரணி வருவாய்க் கோட்டாட்சியர் குணசேகரன் தலைமையில், கடந்த 17 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 1,344 மனுக்களை அளித்தனர்.
தொடர்ந்து, ஜமாபந்தி நிறைவு விழா, விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆரணி வருவாய்க் கோட்டாட்சியர் குணசேகரன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் மணி, சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் காளிதாஸ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பட்டா மாற்றம், தோராயப் பட்டா, புதிய குடும்ப அட்டை உள்பட 263 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இதில், அதிமுக மாவட்ட துணைச் செயலர் துரை, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, வட்ட வழங்கல் அலுவலர் சரஸ்வதி, விவசாய சங்கப் பிரதிநிதிகள் வெங்கடேசன், ரமேஷ் மற்றும் பொதுமக்கள், வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com