தினமணி' நாளிதழும், ஆரணி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியும் இணைந்து தாகம் தணிப்போம் என்ற நிகழ்ச்சியை ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடத்தின.
இதையொட்டி, பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள், போக்குவரத்துக் காவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோருக்கு குடிநீர் புட்டிகள், தர்ப்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
ஆரணி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி உரிமையாளர் என்.ரமேஷ் குடிநீர் புட்டிகள், தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.