காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: அகில இந்திய செயலர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட கங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட கங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலர் ஜி.குமார் தலைமை வகித்தார். திருவண்ணாமலை நகரத் தலைவர் வெற்றிச்செல்வன், வடக்கு மாவட்டத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்எல்ஏக்கள் விஷ்ணுபிரசாத், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய செயலர்கள் ஸ்ரீவல்லபிரசாத், கிருஸ்டோபர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில், ஸ்ரீவல்லபிரசாத் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில், கட்சி நிர்வாகிகள் எழுச்சியுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலர் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ முனிரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஏழுமலை, மாவட்ட நிர்வாகிகள் செந்தமிழ்அரசு, காமராஜ், புருசோத்தமன், குணசேகரன் உள்பட திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட, வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com