பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: மாவட்ட நீதிபதி பங்கேற்பு

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் 15-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.மகிழேந்தி கலந்துகொண்டு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மற்றொரு சிறப்பு விருந்தினரான சென்னை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் தனி அலுவலரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான கே.தனவேலும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் கல்லூரிச் செயலர்கள் ஏ.சி.ரவி, ஏ.சி.பாபு, கல்லூரி முதல்வர் வி.திருநாவுக்கரசு, துணை முதல்வர் வெங்கடரத்தினம், கலைக் கல்லூரி முதல்வர் சுகுமார், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆறுமுகமுதலி, கல்வியியல் கல்லூரி முதல்வர் வையாபுரி, தனி அலுவலர்கள் ஜெயபால், வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com