ஆரணியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வியாபாரிகள் ரூ.66 ஆயிரம் நிதி

ஆரணி கடைத் தெருவில் கண்காணிப்புக் கேமரா அமைக்க ரூ.66 ஆயிரம் நிதியை டிஎஸ்பி செந்திலிடம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் சனிக்கிழமை வழங்கினார்.

ஆரணி கடைத் தெருவில் கண்காணிப்புக் கேமரா அமைக்க ரூ.66 ஆயிரம் நிதியை டிஎஸ்பி செந்திலிடம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் சனிக்கிழமை வழங்கினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் எல்.குமார் தலைமையில், மாநில துணைத் தலைவர் அஜந்தா சர்மா முன்னிலையில், ஆரணி கடைத் தெருவில் கண்காணிப்பு கேமரா அமைக்க ஆரணி டிஎஸ்பி செந்திலிடம்  ரூ.66 ஆயிரம் நிதியை சங்கத்தினர் வழங்கினர். அப்போது, சங்க நிர்வாகிகள் கிஷோர்ஜி, முருகானந்த், அக்பர்பாஷா, பக்ருதின்அலி, அகமதுபாஷா, குட்டிவெங்கடேசன், ராம், சிவா, கமல்கபாலி, டி.எச்.குருராஜாராவ், சீனிவாசராகவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com