பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வுப் பயிற்சி

வந்தவாசி தீயணைப்புத் துறை சார்பில், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வுப் பயிற்சி வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி தீயணைப்புத் துறை சார்பில், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வுப் பயிற்சி வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்து, பயிற்சியைத் தொடக்கிவைத்தார். கல்லூரி முதல்வர் எஸ்.மைதிலி முன்னிலை வகித்தார். வந்தவாசி தீயணைப்பு நிலைய அதிகாரி எஸ்.திருநாவுக்கரசு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், பேரிடர் குறித்தும், அதனை எதிர்கொள்வது குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு முகாமில், வந்தவாசி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் வாசுகி சிறப்புரை ஆற்றினார். மேலும், வாக்காளர் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களை அவர் மாணவிகளுக்கு வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com