கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனசேகரன் தலைமை வகித்தார்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் மோகன், ஸ்ரீராமுலு, பள்ளித் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 250 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், வேலாயுதம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.