மது, குட்கா விற்பனை: 4 பேர் கைது

ஆரணி அருகே களம்பூர் பகுதியில் மது, குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆரணி அருகே களம்பூர் பகுதியில் மது, குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக 
4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போளூரை அடுத்த களம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையிலான போலீஸார் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கருங்காலிகுப்பம் கிராமத்தில் சாமிநாதனும் (60), நடுக்குப்பம் கிராமத்தில் கோதண்டமும் (47) அரசு மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, வடமாதிமங்கலம் கிராமத்தில் மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ததாக அகமத்பாஷாவும், அதே பகுதியில் பெட்டிக் கடையில் பெட்ரோலை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற அசோகனும் (55) கைது செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com