ஆரணியில் அம்மா உணவகம்  திறப்பு

ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் அம்மா உணவகத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் அம்மா உணவகத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
ஆரணி நகராட்சி அலுவலகம் அருகே ஏற்கெனவே அம்மா உணவகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 
மேலும், கூடுதலாக ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. 
இதை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவை விநியோகம் செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, ஆரணி மக்களவை உறுப்பினர் செஞ்சி வெ.ஏழுமலை, ஆரணி கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் அசோக்குமார், அரசு வழக்குரைஞர் க.சங்கர், ஜெயலலிதா பேரவை நகரச் செயலர் பாரி பி.பாபு, நகர ஒன்றியச் செயலர்கள் எ.அசோக்குமார், பி.ஆர்ஜி.சேகர், அரையாளம் எம்.வேலு, மாவட்ட பாசறை செயலர் கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலர்கள் டி.கருணாகரன், ரமணி நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com