ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

செங்கம் தமிழ்ச் சங்கம், சிகரம் பன்னாட்டுப் பள்ளி இணைந்து ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவை அண்மையில் நடத்தின.

செங்கம் தமிழ்ச் சங்கம், சிகரம் பன்னாட்டுப் பள்ளி இணைந்து ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவை அண்மையில் நடத்தின.
ஆசிரியர் தினத்தையொட்டி, திருவள்ளுவர் நகர் சிகரம் பன்னாட்டுப் பள்ளி வளாகத்தில்  நடைபெற்ற இந்த விழாவுக்கு செங்கம் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி தலைமை வகித்தார். வழக்குரைஞர் கஜேந்திரன், செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் கந்தசாமி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மகேஸ்வரி, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயவேல் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் அப்துல்காதர் கலந்து கொண்டு, ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினார்.
தொடர்ந்து, ஆசிரியர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பிடம் பெற்ற ஆசிரியர்களுக்கு செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி, பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். செங்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பரிசு, சான்றுகளை வழங்கி, ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துப் பேசினார். விழாவில், தமிழ்ச் சங்க துணைத் தலைவர் கிருஷ்ணன், வட்டாரக் கல்விஅலுவலர்கள் (தண்டராம்பட்டு) பாஸ்கரன், கோவிந்தராஜ், (புதுப்பாளையம்) சிராஜ், ஜான்வின்சென்ட், சிகரம் பள்ளி ஆசிரியர் சந்தோஷ்குமார், செங்கம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் ஜாஸ்மின் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com