திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆய்வக திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி துணை ஆய்வாளர் குமார் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் ஏ.அருள்செல்வன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கணித ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
இதில், கணித ஆசிரியர்கள் வரதன், சதீஷ்குமார், பிரேமா, தமிழ்மணி, டைட்டஸ் தேற்றவாளன், பழனிவேலு, அன்புவேலன், விஜய் ஆனந்த், முருகன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.