தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டிகள் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பவானி வரவேற்றார். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான ரேவதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டிகளை தொடக்கி வைத்துப் பேசினார். திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினார்.
போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக, 9 மாணவ, மாணவிகள் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர்கள் பாலமுருகன், ராஜமாணிக்கம், சங்கர், முதுகலை ஆசிரியர் வேலாயுதம் ஆகியோர் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com