திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே இருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், திருவண்ணாமலை டிஎஸ்பி அண்ணாதுரை மேற்பார்வையில், ராஜகோபுரம் எதிரிலும், கோயில் மாட
வீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.