கல்லூரியில் அனைத்து மன்றங்கள் தொடக்க விழா

சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள திவ்யா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில்


சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள திவ்யா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் அனைத்துத் துறை மன்றங்கள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திவ்யா கல்வி நிறுவனங்களின் தாளாளர் பா.செல்வராசன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் டாக்டர் செந்தில்குமார், துணைத் தலைவர் பிரவின்குமார், நிர்வாக அலுவலர் சீனிவாசராகவன், ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் நஷிர்பாஷா வரவேற்றார். பொருளாளர் திலகவதி செல்வராசன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதில், சிறப்பு விருந்தினராக பாமகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ எதிரொலி மணியன் கலந்து கொண்டு அனைத் துறை மன்றங்களைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாணவி பூஜா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com