போளூர் நகரில் விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, போளூர் நகரில் புதிய பேருந்து நிலையம், பஜார் வீதி, தாலுகா அலுவலகம், கணபதி தெரு, கண்ணன் தெரு, அரசிங் தெரு, பொன்னுசாமி தெரு உள்பட 30 இடங்களில் விநயாகர் சிலையை பக்தர்கள் வைத்து வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து, இந்தச் சிலைகளை போளூர் பெரிய ஏரி, கூர் ஏரியில் கரைக்க ஊர்வலமாக சனிக்கிழமை எடுத்துச் சென்றனர். ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், பெரிய ஏரி, கூர் ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.