தடகளப் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பாராட்டு

செய்யாறை அடுத்த மேட்டு எச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

செய்யாறை அடுத்த மேட்டு எச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
 செய்யாறு கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் முனுகப்பட்டு அரசு பள்ளியில் அண்மையில் நடைபெற்றன. இதில், பங்கேற்ற மேட்டு எச்சூர் உயர்நிலைப் பள்ளி மாணவி எஸ்.மதுமிதா 400 மீ ஓட்டத்தில் முதலிடமும், 1,500 மீ ஓட்டத்தில் 2-ஆவது இடமும், மும்முறை தாண்டுதலில் மூன்றாம் இடமும் பெற்று மண்டல அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
 மாணவி ஏ.சரஸ்வதி 800 மீ ஓட்டத்தில் 3-ஆவது இடமும், மாணவர் பி.யுவராஜ் 300 மீ ஓட்டத்தில் 3-ஆவது இடமும் பெற்றனர். குழுப் போட்டியில் 17 வயதுக்கு உள்பட்ட பெண்கள் கபடிப் போட்டியில் 2-ஆம் இடம் பிடித்தனர்.
 இந்த நிலையில், பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடல் கல்வி ஆசிரியை ஆ.சத்யாவையும் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.மார்கபந்து, பெற்றோர் - ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com